ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட் டத்தில் செவ்வாயன்று காலை அலிஷ்போரா பகுதியில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்ப தாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது பயங்கரவாதி கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக் கிச்சூடு நடத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து பாதுகாப்பு படை யினர் நடத்திய எதிர் தாக்குதலில் லஸ்கர்- இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மொரிபாட்மக்பூல், ஜாசிம் பாரூக் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.